Skip to main content

ஜம்மு காஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணைராணுவவீரர் மரணம்

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஆரோக்கிய தாஸ் (51) இவர் மத்திய துணைராணுவப்படை பாதுகாப்பு ரோந்து வாகன பொறுப்பாளராக ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் டால் ஏரி பகுதியில் பணி செய்து வருகிறார்.  சனிக்கிழமை நள்ளிரவில் பணியில் இருந்தபோது இறந்து கிடந்ததாக சிதம்பரத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு  தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Jammu and Kashmir

 

இதனைதொடர்ந்து  சிதம்பரம் தாலூக்கா காவல் நிலையம் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ்  உதவியுடன் ஷம்மு காஷ்மீரில் ஆரோக்கியதாஸ்சுடன் பணியாற்றும்  நண்பர்களை  தொடர்பு கொண்டு  விபரம் அறிந்தபோது .அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு வந்து பின் சிதம்பரம் அவரது வீட்டிற்கு கொண்டு வருவதற்கான விபரங்களை குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Jammu and KashmirJammu and Kashmir

இன்று காலை அவரது உடல் சிதம்பரத்திற்கு வருவதாக தெரிகிறது. இறந்து போன ஆரோக்கிய தாஸுக்கு ஆரோக்கிய செல்வி (48) என்ற மனைவியும்' ஆகாஷ் (24) என்ற மகனும், 'சுபிக்க்ஷா (19) என்ற மகளும் உள்ளனர். கவர்னர் ரோஸ்ஸையாவிடம் 2015 ம் ஆண்டு சிறந்த பாதுகாப்பு பணிக்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐ.நா அமைதி பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டு நெதர்லாந்தில் 18 மாதங்கள்  பணியாற்றியுள்ளார். அவரது உடல் திங்கள் மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துணைராணுவத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

விமரிசையாக நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் திருவிழா

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Nataraja Temple Arudra Chariot Festival held critically

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சாமிகளை எடுத்துச் சென்று மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். காவல்துறை பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட ஏற்படாத வகையில் தீவிர காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.