Skip to main content

ராணுவ வீரரின் இறுதிச்சடங்கைப் புறக்கணித்தாரா முன்னாள் அமைச்சர்..?

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

india- china border indian army incident ramanathapuram district


லடாக் பகுதியில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் சாதி மதம் பாராமால், கட்சி பாராமல் அனைவரும் பங்கேற்றிருக்க அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன் மட்டும் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் புறக்கணித்தார் எனும் செய்தி மாவட்டத்தைத் தாண்டி காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கின்றது.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் இந்திய ராணுவத்தினை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர் என ராணுவத் தரப்பு அறிவித்த நிலையில், வீரமரணமடைந்த 20 வீரர்களில் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே பகுதியில் ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா கடுக்கலூரைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பது தெரிய வந்த நிலையில், இறுதிச்சடங்கினை உறவினர்கள் ஒப்புதலுடன் கடுக்கலூரிலேயே நிறைவேற்றவுள்ளதாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம். வீர மரணமடைந்த பழனியின் உயிரற்ற உடல் நேற்றிரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், இன்று அதிகாலை கடுக்கலூர் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக பழனியின் வைக்கப்பட்டிருக்க, தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தியது.
 

india- china border indian army incident ramanathapuram district


இவ்வேளையில் அதிமுக தரப்பில் மா.செ.முனியசாமி, திமுக தரப்பில் மா.செ.முத்துராமலிங்கம், அமமுக தரப்பில் ஆனந்த், பாஜக தரப்பில் முருகன் உள்ளிட்ட பல கட்சிகளின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில், மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியுள்ள நிலையில் திருவாடனை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் கருணாஸ், பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சதர்ன பிரபாகர் மற்றும் தொகுதியின் நாடாளுமன்ற எம்பி நவாஸ்கனி உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். மற்ற இரு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளாத நிலையில் பூத உடலுக்கான இறுதிச்சடங்கினை வீர மரணமடைந்த பழனியின் மூத்த மகன் செய்ய, முப்படை வீரர்களின் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

மாவட்டத்திலுள்ள ஏனைய ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களிருவருக்கும் தேசிய பற்றென்பதே கிடையாது என்கின்ற ரீதியில் வாட்ஸ் அப்பில்  செய்திகள் பரவிய நிலையில், நல்லடக்கம் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி, பழனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எஸ்கேப்பானார். இறுதி வரைக்கும் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது மக்கள் மத்தியில், வாட்ஸ் அப்பில் வசைப்பாடும் பொருளாக இருந்து வருகின்றது.
 

india- china border indian army incident ramanathapuram district


இது குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டனிடம் கேட்ட பொழுது, "எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் தான் வரவில்லை. வேண்டுமென்றே புறக்கணித்தேன் என்பது தவறான செய்தி. ராணுவ வீரரின் தொண்டு அளப்பரியது. அதைப் போய்ப் புறக்கணிப்பேனா..? உடல் நிலை சரியானதும் அவரது இல்லத்திற்குச் சென்று தேவையான நிதியுதவி வழங்கி, அவர்கள் குடும்பத்தை மேம்படுத்துவதே என் எண்ணம்." என்றார் அவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.