Skip to main content

சேலம் காதல் ஜோடி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலத்தில், சயனைடு கலந்த சாக்லெட்டை தின்று இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்-2 முடித்துவிட்டு, அப்பாவுடன் இணைந்து வெள்ளித்தொழிலை கவனித்து வந்தார்.


 

incident in salem

 

கடந்த அக். 8ம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில், வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய சுரேஷ், அதன்பின் வீடு திரும்பவில்லை. வழக்கமாக எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்பதால், மகன் வராதது குறித்து பெற்றோர் பதற்றம் அடைந்தனர். அவருடைய செல்போனுக்கு தொடர்ந்து முயற்சித்தபோது அணைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வரவே, உடனடியாக நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேட ஆரம்பித்து விட்டனர்.


இந்த நிலையில்தான் அன்று இரவு 11 மணியளவில், குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கோபிக்குச் சொந்தமாக உள்ள கார் ஷெட் முன்பு சுரேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிற்பது தெரிய வந்தது. கார் ஷெட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்ததால், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.  


அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரின் ஏசி இயங்கிய நிலையில் இருந்தது.


இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதல்கட்ட விசாரணையில், சுரேஷூடன் இறந்து கிடந்தது, குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜோதிகா (20) என்பதும், இருவரும் காதலர்கள் என்பதும், சாக்லெட்டில் சயனைடை கலந்து தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இருவரும் தொடர்ச்சியாக தினமும் செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

incident in salem



காதல் ஜோடி இருவருமே சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சுரேஷின் பெற்றோர் அளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் பொருளாதார வசதி கொண்டது இல்லை. மேலும், 'படிக்கிற வயதில் காதல் எதற்கு? படிப்பை முடி; பிறகு பார்க்கலாம்' என்று கூறி, ஜோதிகாவின் பெற்றோர் அவருடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்பு, ஜோதிகாவின் செல்போனுக்கு சுரேஷ் அனுப்பிய குறுந்தகவல் மூலமாகத்தான் மகளின் காதல் விவகாரம் அவருடைய பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷை பார்க்கவோ, பேசவோ கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதற்கிடையே ஜோதிகாவுக்கு அவருடைய பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த ஜோதிகாவுக்கு படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் குறியாக இருந்துள்ளனர்.


 

incident in salem

 

இதையெல்லாம் சுரேஷிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார் ஜோதிகா. இதனால் எங்கே தாங்கள் நினைத்தபடி காதல் கைகூடாமல் போய்விடுமோ என்று கருதிய காதலர்கள், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து, வெள்ளித்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடை சாக்லெட்டில் கலந்து தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு, அவர்கள் கலவியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


எனினும், தற்கொலை தொடர்பாக அவர்கள் ஏதாவது முன்கூட்டியே கடிதம் ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருவரின் சடலங்கள் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷத்தின் தன்மை, அளவு, தற்கொலைக்கு முன்பு புணர்ச்சியில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்கிறது காவல்துறை.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.