Skip to main content

நீதிமன்ற வளாகத்திலேயே ஆசிட் வீச்சு; விசாரணையில் வந்த திடுக் தகவல்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Acid incident in the court premises itself; Shocking information from the investigation

 

இன்று, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த கவிதா என்ற பெண் மீது அங்கு வந்த மர்ம நபர் ஆசிட் வீசி உள்ளார். இதனால் அலறித் துடித்த கவிதாவை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மடக்கிப் பிடித்து கோவை மாநகர போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆசிட் வீசியது அந்தப் பெண்ணின் கணவர் எனத் தெரிய வந்துள்ளது.

 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பதும் அவருடைய மனைவியான கவிதா மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கவிதா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் பயணி ஒருவரிடம் 10 சவரன் தங்க நகையைப் பறித்துள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

 

இன்று வழக்கில் ஆஜராவதற்காக கவிதா நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது கணவர் சிவா நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் எடுத்து வந்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த சல்ஃபர் ஆசிட்டை கவிதாவின் முகம் மற்றும் உடல் மேல் பரவலாக வீசியுள்ளார். இதன் பின்னரே அங்கிருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டதோடு அவரது கணவரை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கியதால் கவிதாவிற்கும் அவரது கணவர் சிவாவிற்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிவா ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.