Skip to main content

திமுகவிற்கு எதிராக பாஜக – தினகரன் ரகசியக் கூட்டணி! :அம்பலப்படுத்தும் வைத்தியநாதன் !

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

கோடை வெப்பத்தையும் விட தேர்தல் வெப்பம் அனல் பறக்கத் துவங்கியுள்ளது. வெற்றி மட்டுமே தங்களின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் என்பதால் கச்சைக்கட்டிக்கொண்டு களத்தில் சுழன்றபடி இருக்கின்றன கழகங்கள். அதிமுக, திமுக கட்சிகளுக்கு சவாலாக இருப்பார் என பரபரப்பாக சொல்லப்பட்ட டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. தொண்டர்களோ சுறுசுறுப்பில்லாமல் சோர்ந்து போயிருக்கிறார்கள். வைட்டமின் ’ ப ’ இன்னும் வந்து சேராததால் அக்கட்சியினர் மத்தியில் வேகம் அதிகரிக்கவில்லை. அ.ம.மு.க. சார்பில் களத்தில் நிற்கும் வி.வி.ஐ.பி. வேட்பாளர்கள் தொகுதிகளில் மட்டும் வேகம் தெரிகிறது. 

          

 

இந்த நிலையில், சென்னையில் உள்ள தினகரனின் வீட்டுக்குச் சென்று கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு தினகரனுக்கு எதிரான அதிரடியை கிளப்பியிருக்கிறார் தென்சென்னை வடக்கு மாவட்ட அ.ம.மு.க.வின் துணை செயலாளர் வைத்தியநாதன். இவரைப் போல தமிழகம் முழுவதும் பதவிகளை ராஜினாமா செய்யும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தினகரனின் தொண்டர்கள். ராஜினாமா செய்த பலர், திமுகவில் இணைந்து வருகின்றனர். 

 

            

 BJP-Dinakaran secret coalition against DMK: exposed vaitheesavaran

 

தினகரனுக்கு எதிராக வாள் சுழற்றியுள்ள வைத்தியநாதனை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, ‘’ தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கலைராஜன், திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்காக திருச்சிக்கு கலைராஜன் புறப்பட்டு விட்டார் என அறிந்ததும், அவர் இணைவதற்கு முன்பாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் கொடுத்த யோசனையின்படி கலைராஜனை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார் தினகரன். 

            

 

 BJP-Dinakaran secret coalition against DMK: exposed vaitheesavaran

 

நீக்கியதுடன் கலைராஜன் இருந்த பதவியில் சுகுமார்பாபுவை நியமித்தார் தினகரன். இது, என்னைப் போன்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகளை கோபப்பட வைத்தது. முறைப்படி புதிய மா.செ.வாக என்னைத்தான் நியமித்திருக்க வேண்டும். அல்லது மாவட்ட கழகத்தில் உள்ள நிர்வாகிகளை அழைத்து விவாதித்திருக்க வேண்டும். இதை எதையும் செய்யாமல், வெற்றிவேல் சொல்கிறார் என சுகுமார்பாபுவை நியமித்தார். இப்பதவியில் நியமிக்கும் வரை சுகுமார்பாபு எங்கிருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. கட்சியோடு தொடர்பில்லாதவரை எப்படி பெரிய பதவியில் நியமிக்கலாம்? எல்லாம் பணம் படுத்தும்பாடு ! கட்சிக்காக உழைக்கவும், கொடி பிடிக்கவும், போஸ்டர் ஒட்டவும், காசு-பணம் செலவழிப்பதும் என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்கள். ஆனால், கட்சி பதவி மட்டும் முறைவாசல் செய்பவர்களுக்கா?

          

 

அதே சமயம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனது சாதியின் அடையாளமாகவே நடத்திக்கொண்டிருக்கிறார் தினகரன். மாநில பொறுப்புகள் தொடங்கி கீழ்நிலை பொறுப்புகள் வரை 90 சதவீதம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமைத் தரப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். மாற்று சமூகத்தினரை தினகரன் அரவணைப்பதில்லை.  குறிப்பாக, வன்னியர் சமூகமானாலே அவருக்கு எட்டிக்காயாக இருக்கிறது. ஆனால், கட்சிக்கு செலவு செய்ய மட்டும் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார் தினரகரன். இதனால், முக்குலத்தோர் தவிர அனைத்து சமூகத்தைச் சேர்ந்த தொண்டர்களும் தினகரன் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். சாதி கட்சி நடத்தும் தினகரன், பேசாமல், அ.ம.மு.க. கட்சியை முக்குலத்தோர் முன்னேற கழகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். 

         

 BJP-Dinakaran secret coalition against DMK: exposed vaitheesavaran

 

மேலும் இன்றைய சூழலில் தினகரன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. வெற்றிவேலிடம் அடகு வைத்துள்ளார் தினகரன். வெற்றிவேல் சொல்வதை மட்டுமே நிறைவேற்றுகிறார் அவர். தமிழகம் முழுவதும் கட்சி பதவியில் யார் இருக்க வேண்டும் ? யார் இருக்கக்கூடாது ? என வெற்றிவேல்தான் தீர்மானிக்கிறார். அவரது கட்டளையை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் தினகரன், அதற்கேற்ப கட்சியனரை நீக்கவும் சேர்க்கவும் செய்து வருகிறார். இதனையெல்லாம் ஜீரணிக்க முடியாமல்தான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். 

         

 

அதிமுக பிளவுப்பட்டதற்கு தினகரன் தான் காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட வேண்டாம் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தினர். அதை ஏற்று இவர் போட்டியிடாமல் தவிர்த்திருந்தால் அதிமுக உடைந்திருக்காது. நான் தான் போட்டியிடுவேன் என சர்வாதிகாரத்தனமாக முடிவு செய்து தேர்தலில் குதித்தார். 

               

 

தினகரன் ஜெயித்தால் முதல்வராகி விடுவார் என பாஜகவுக்கு சொல்லப்பட்டது. அதனால் கட்சியை உடைத்தது பாஜக. தினகரன் தனி மரமானார். சில எம்.எல்.ஏ.க்களை வளைத்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களின் சமயோஜித முடிவுகளால் தினகரனின் திட்டம் தவிடுபொடியானது. எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டவர்களை வைத்து தனிக்கட்சி துவக்கி, தற்போது முக்குலத்தோர்க்கான சாதி கட்சி நடத்தி வருகிறார் தினகரன்.  

                

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உண்மையான நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விருப்பம் இல்லை. இதனை ஏற்க மறுத்து, தேர்தலில் கட்சியை இறக்கிவிட்டுள்ளார் தினகரன். இதற்கு பின்னணியில் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது. அதாவது, பாஜகவின் பினாமி ஆட்சியாக  இபிஎஸ், ஓபிஎஸ் இருப்பதாக திட்டுகிறார் தினகரன். ஆனால், உண்மையில் பாஜகவின் பினாமியாக அரசியல் செய்வது தினகரன்தான். 

               

 

பாஜகவை கடுமையாக எதிர்ப்பதும் விமர்சிப்பதும்  திமுக-காங்கிரஸ் கூட்டணிதான். இக்கூட்டணியின் ஓட்டு வலிமையை குறைக்க வேண்டுமென்பது பாஜகவின் திட்டம். இதனை செயல்படுத்த பாஜக தலைமை எடுத்த, எடுப்பார் கைப்பிள்ளைதான் தினகரன். அதாவது, அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த கிறுஸ்தவர்களும், முஸ்லீம்களும் திமுக கூட்டணியை ஆதரிப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான  மத சிறுபான்மையினரின் இத்தகைய வாக்குகள் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பலம். அதனால் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லக்கூடாது என திட்டமிடுகிறது பாஜக தலைமை. திமுக கூட்டணிக்கு செல்லும் அந்த வாக்குகள் தடுக்கப்பட்டால்தான் அதிமுக-பாஜகவுக்கு வெற்றிகிடைக்கும் என பாஜக தலைமைக்கு தகவல் தரப்பட்டுள்ளது.  

              

திமுக கூட்டணிக்குச் செல்லாமல் அந்த வாக்குகள் மடை மாற்றம் செய்யப்பட வேண்டுமென்பதே பாஜகவுன் ஒன் லைன் அஜெண்டா ! ஆக, அந்த வாக்குகளை மடைமாற்றம் செய்ய, மக்கள் அறிந்த முகம் ஒன்றும் பாஜகவுக்கு தேவைப்பட்டது. அந்த முகம்தான் தினகரன். அதனாலேயே, திமுகவுக்கு இணையாக பாஜகவை விமர்சிக்குமாறு தினகரனுக்கு அசைண்மெண்ட் கொடுத்தது பாஜக ! அப்படி அதிகப்படியாக திட்டினால்தான் பாஜக-அதிமுகவுக்கு எதிரான முஸ்லீம், கிறுஸ்துவ வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் தினகரனுக்கு செல்லும். அப்படி வாக்குகள் பிரிவது தங்களுக்கு சாதகம் என திட்டமிட்டு தினகரனை வளைத்தனர். தினகரனும் இதற்கு உடன்பட்டார். அதற்கேற்ப அவரும் கடுமையாக அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து வருகிறார். 

             

அதனால்தான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் வலியுறுத்தியும் அதனை ஏற்காமல் தேர்தலில் குதித்துள்ளார் தினகரன். அவரின் இந்த முடிவுக்கு பாஜகதான் காரணம். பாஜக அசைண்மெண்டின் ‘ பி ’ டீமாக தினகரன் மாறியிருக்கிறார் என்பது தினகரனின் மோ(ச)டித்தனம் ! ‘’ என்றார் அதிரடியாக. 

            

தினகரனின் ’மோடி‘யிசம் மெல்ல மெல்ல கிழியத்துவங்கியுள்ளது !

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.