Skip to main content

கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

th


திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் சாலைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பி.ஆர்.பாளையத்தில் தன்னுடைய பேத்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, பைந்தமிழ்த் தோட்டம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி, கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.

 

இக்கொலை சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சிறுகனூர் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் முத்துவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து தொடர் விசாரணை செய்துவந்தனர்.

 
இதில், முத்துவின் மனைவி மகாலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே மலர்ந்த உறவை, முத்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையில் அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகாலட்சுமி கூலிப்படையை ஏவி முத்துவை கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 
 

இதையடுத்து, முத்துவின் மனைவி மகாலட்சுமி மற்றும் முத்துவை கொலசெய்த மர்ம நபர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளதால், அவர்களைக் கைது செய்யக் காவல்துறை தொடர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்