Skip to main content

லிவிங் டூ கெதரில் பிறந்த பெண் குழந்தை விற்பனை - மேலும் இருவர் கைது

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

nn

 

சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் பிறந்த குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கர்நாடகாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சந்திரசேகரன் அதே மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் சென்னை தி நகரில் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வரை குழந்தையைக் காப்பகத்தில் வைத்து பராமரித்துக் கொள்ளலாம் என்று கார் ஓட்டுநர் சந்திரசேகர் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

 

அதன் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை சந்திரசேகரன் விற்றதோடு, மற்றொருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் புகார் அளித்ததின் பேரில் கார் ஓட்டுநர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த மதபோதகர் பிரான்சிஸ், ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் குழந்தைகள் விற்பனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.