Skip to main content

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019
rain

 

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணாமாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவுநேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விராலிப்பட்டியில் 7 சென்டிமீட்டர் மழையும், தஞ்சையில் 6 சென்டிமீட்டர் மழையும், திருமயம், கமுதியில் 5 சென்டிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்