Skip to main content

வீடுகட்டி தருவதாக மோசடி... போலீசார் வழக்குப்பதிவு!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

Fraud to build a house ... Police file a case!

 

கடலூர் மாநகராட்சியில் உள்ள கே.டி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாற்பது வயது அனிதா. இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் கடற்கரை சாலையை ஒட்டி உள்ள கூனிமேடுபகுதியில், ஒரு வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்ட தீர்மானித்தார். அதன்படி கூனிமேடுபகுதியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்கு முன்பதிவு செய்தார். அதற்கு முன் பணமாக 2018 ஆம் ஆண்டு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒருதேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 52 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தார். அந்த வங்கியும் அனிதா அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அவருக்கு 2019 ஆம் ஆண்டில் 52 லட்ச ரூபாய் கடன் தருவதற்கு ஒப்புதல் அளித்து அதில் முதல் தவணையாக 42 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளது.

 

அனிதா அந்த 42 லட்ச ரூபாய் பணத்தையும் வீட்டுமனை கொடுத்து அதில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்தம் செய்து கொடுத்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த  46 வயது ஜெயச்சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். வீட்டுமனை உட்பட அதில் வீடுகட்டி முடித்து அனிதாவிடம் ஒப்படைப்பதற்கு  ஜெயச்சந்திரன் மேலும் 12 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். வங்கியிலிருந்து அடுத்து வரவேண்டும் தவணை பணம் வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. வேறு வகையில் தனது உறவினர்கள் மூலம் 12 லட்சம் பணத்தை திரட்டி ஜெயச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். பணம் முழுவதையும் பெற்றுக்கொண்ட ஜெயச்சந்திரன் அனிதாவிற்கு வீடு கட்டித் தருவதாக கூறிய அந்த இடத்தில் தனது உறவினர் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்து அனிதாவை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். தற்போது இதுகுறித்து தகவல் தெரியவந்ததையடுத்து அனிதா விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஜெயச்சந்திரன் தன்னிடம் பண மோசடி செய்தது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஜெயச்சந்திரன் மோசடி செய்தது உறுதி என்பது தெரிய வந்துள்ளதையடுத்து  மோசடி நபர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.