Skip to main content

சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஒருவர் கைது!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

  சிதம்பரத்தில்  போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த  காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளார்.

 

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பில் விழுப்புரம் மத்திய பபுலனாய்வு கூழு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.மோட்டார் சைக்கிளில் ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

 Fake liquor factory discovery in Chidambaram: one arrested



அப்போது சிதம்பரம் அருகே உள்ள  கருநாகரநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் சுந்தர் (26).என்பது தெரியவந்தது. இவர் சாராய வியாபாரி இவர் மீது சாராய கடத்திய வழக்கு உள்ளது. மேலும் போலீசார் விசாரித்தபோது. அவர் சிதம்பரம் பழைய புவனகிரி சாலை அருகே காமாட்சி அம்மன் நகரில்  ஒரு மாடி வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்ததாக விசாரணை யில் தெரியவந்தது.

 

 Fake liquor factory discovery in Chidambaram: one arrested



பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சிதம்பரம் காமாட்சி அம்மன் நகருக்கு சென்றனர். உடனே போலீசார்  மாடி வீட்டில்  முன்பக்கம் கேட்டை உடைத்து உள்ளே சென்று அறை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது, 3ஆயிரத்து 550 காலி மது பாட்டில்,மதுவுடன் 2 ஆயிரத்து 710 மது பாட்டில், கேன் 48,  போலி மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் இயந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

 

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரை கைது செய்தனர். இதன் மதிப்பு  ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.