Skip to main content

துரைமுருகனோடு இந்த சோதனைகள் முடிந்து விட்டதா? திமுக கூட்டணியில் உள்ள பலருக்கும் குறி!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் இரண்டு  நாட்களாக விடிய விடிய நடத்தப்பட்ட வருமானவரி சோதனை திமுகவை மிரள வைத்திருக்கிறது.

 

v

 

சோதனையின் முதல் கட்டமாக 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,  துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில்  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக சாக்கு மூட்டைகளிலும் , துணி பைகளிலும் ,  அட்டைப்பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே வைக்கப்பட்டிருந்தன என்று சொல்லப்படுகின்றது.   
கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் பேப்பர்களால் சுற்றப்பட்டு , வார்டு வாரியாக எண்கள் எழுதப்பட்டு,சம்மந்தப்பட்ட கட்சியினரின் பெயர்கள் எழுதப்பட்டு  வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டு இருந்தன என்று தெரியவந்துள்ளது.     

 

வாக்காளர் பட்டியலும், வார்டு வாரியாக வாக்காளர்கள் பெயர்கள் கொண்ட பட்டியலும் பணத்தோடு இணைக்கப்பட்டு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக்கண்டு வருமானவரித்துறை அதிகாரிகள், பண விநியோகத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

d

 

 இந்த தொடர் சோதனையின் தொடர்ச்சியாக, துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டிலும் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ,  ஐந்து கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  பெண் வாக்காளர்களை கவர்வதற்காக, விநியோகம் செய்ய  வைக்கப்பட்டிருந்த 25 கிலோ தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பறக்கும்படை வட்டாரத்தினர் மத்தியில் செய்தி உலாவுகிறது. 

 

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிக அளவு பணம் மற்றும் நகைகள் ஆதாரபூர்வமாக  கைப்பற்றப்பட்டு இருப்பதால் இது குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர் வருமானவரித்துறை அதிகாரிகள் . இதனால்,  வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர்ஆனந்துக்கு , சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 


இந்த நிலையில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்களிடம் எதிரொலிக்கிறது. இதற்கிடையே, துரைமுருகனோடு இந்த சோதனைகள் முடிந்து விடாது. திமுக கூட்டணியில் உள்ள 'பெரிய மனிதர்கள்' பலருக்கும் குறி வைத்துள்ளது வருமானவரித்துறை என்று தகவல்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.