Skip to main content

திமுகவினர் மீது தேமுதிக மா.செ புகார்!

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
Vellore DMK ds

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசையும், அதற்கு முயற்சி எடுக்காத மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து தமிழகத்தில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஏப்ரல் 5ந்தேதி முழு பந்த்க்கு அழைப்பு விடுத்தது. அதன்படி பந்த் நடைபெற்றது.

வேலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அதிமுக தொழிற்சங்கத்தினர் அரசு பேருந்துகள் சிலவற்றை இயக்கினர். அதனை மறித்து கோஷம் எழுப்பினர் திமுகவினரும், அதன் தோழமை கட்சியினரும்.

காலை 10 மணியளவில் வேலூர் மாநகரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாரதி மாளிகை அருகே திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அப்போது வேலூர் மத்திய மாவட்ட தேமுதிக மா.செ ஸ்ரீதரன் கார் சென்றுள்ளது. அதை மடக்கி கோஷம்மிட்டுள்ளர் திமுக மத்திய மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏவின் ஆதரவார்கள். அதோடு செங்கல் கொண்டு கார் மீது எரிந்துள்ளார்கள். அதற்குள் முக்கிய பிரமுகர்கள் சிலர் தலையிட்டு அது தேமுதிக மா.செ கார். கல்லெடுத்து அடிக்கிறேன் என மோதலை உருவாக்கி வைக்காதீர்கள் எனச்சொல்ல அமைதியாகினார்கள்.

தன் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் ஸ்ரீதர். ஏப்ரல் 5ந்தேதி இரவு காவல்நிலையத்தில், திமுகவினர் மீது உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோஷம்மிட்டனர். போலிஸ் அதிகாரிகள் இன்று வழக்கு பதிவு செய்வதாக கூறி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இன்று ஏப்ரல் 6ந்தேதி எப்.ஐ.ஆர் இதுவரை பதிவு செய்யவில்லை என்பதால் தேமுதிக வழக்கறிஞர்கள் பிரிவு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்தே ஆக வேண்டும் இல்லையேல் காவல்நிலையத்தை முற்றுகையிடுவோம் என கூறி வருகின்றனர்.

பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியதாக 10 திமுகவினர் ஏப்ரல் 5ந்தேதி கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை இன்று 6ந்தேதி திமுக மா.செவும் எம்.எல்.ஏவுமான நந்தகுமார், எக்ஸ் எம்.பி முகமதுசகி ஆகியோர் சிறைக்கு சென்று நலன் விசாரித்தனர். விரைவில் உங்கள் அனைவரையும் பிணையில் வெளியே எடுக்கிறோம், எதற்காகவும் கவலைப்படாதீர்கள் என கட்சியினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளனர்.

தேமுதிக மா.செ தந்த புகார் பதிவானால் இன்னும் சில திமுகவினர் இந்த வழக்கில் கைதாவார்கள் என கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.