Skip to main content

தீவிரவாதிகளை உருவாக்கி அமைச்சரை கொல்லனும்??;என்று பேசிய தி.மு.கவினர் மீது புகார்!!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018


அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

 

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி (தெற்கு மா.செ பொருப்பு), புதுக்கோட்டை மா.செ. பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், கவிதைப்பித்தன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர பொருப்பாளர்களும், பல்வேறு பிரிவு பொருப்பாளர்கள் உடன்பிறப்புகள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

 

dmk

 

ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது... ரயில்ல கூட போக முடியல. எல்லாரும் குட்கா பற்றியே பேசுறாங்க. ஒன்றியத்துக்கு 10 தீவிரவாதிகளை உருவாக்கி விஜயபாஸ்கரை கொல்லனும் என்று பேசினார். அதே போல.. மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணைச் செயலாளரும் அமைச்சர் விஜயபாஸ்கரை விராலிமலைத் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டவருமாக தென்னலூர் பழனியப்பன் பேசும் போது.. அண்ணன் ரகுபதி பேசும் போது சொன்னார் அவர் செத்தால் தான் முடிவுக்கு வரும் என்றும், பரணி கார்த்திகேயன் (அ.ம.மு.க தெற்கு மா.செ) சொன்னது போல தேசிய கொடி இருக்கும் வரைதான் பவர். அதை கழட்டிய பிறகு வா.. ஓட ஓட விரட்டுவோம் என்று சொன்னார். 

 

நானும் விராலிமலைத் தொகுதி என்பதால் எங்கள் வாக்காளர்களும் வெளியே தலைகாட்ட முடியாமல் வெட்கித் தலைகுனிகிறோம். அதனால் ஒன்று ராமலிங்கம் சொன்னது நடக்கனும் இல்லன்னா ஆட்சி கலையனும் அப்ப தான் இந்த தமிழ்நாடு உருப்படும். தேசிய கொடி அவிழ்த்த பிறகு வந்தால் வேட்டியை அவித்துக் கொண்டு அம்மனமாக ஓட ஓட விரட்டுவோம் என்று பேசி முடித்தார்.

 

dmk

 

இந்த பேச்சுகளுக்காக அ.தி.மு.க வழக்கறிஞர் மச்சுவாடி கருப்பையா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்.. அமைச்சர் விஜயபாஸ்கரை அச்சுருத்தும் வகையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தவர்கைள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எச்.ராஜா மீது வழக்கு, அடுத்து தி.மு.க வினர் மீது வழக்கு என்று புதுக்கோட்டையே பரபரப்பாக உள்ளது

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.