Published on 08/09/2020 | Edited on 08/09/2020

கரோனா வைரஸ் தொற்று மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதன்தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்ற மார்ச் மாதம் முதல் பலகட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன.
சென்னையில் கரோனா ருத்ரதாண்டவம் ஆடிவந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு என்பது கடந்த சில நாட்களாக 1,000 -க்கும் குறைவாக இருந்து வருகின்றது. இதனால் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக மாதவரத்தில் 7 தெருக்கள், அண்ணா நகரில் 3 தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன. வளசரவாக்கம், சோழிங்கநல்லூரில் தலா ஒரு தெரு கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளது.