Skip to main content

"இன்று அல்லது நாளைக்குள் சென்னை முழுவதுமாக சீர் செய்யப்படும்!" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

ிு

 

வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து தற்போதும் சில இடங்களில் முடங்கியுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முதல்வர்,  அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். முகாம்களில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. 

 

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வருவாய்த்துறை அமைச்சர், "சென்னை முழுவதும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் வீடுகளுக்குச் செல்வார்கள். இன்று (12.11.2021) அல்லது நாளைக்குள் சென்னை முழுவதும் சீரமைக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. வெளியிடங்களில் தங்கியுள்ளவர்களும் விரைவில் தங்களது வீடுகளுக்குத் திரும்பலாம். மக்கள் அச்சப்பட தேவையில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்