Published on 30/10/2019 | Edited on 30/10/2019

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அமரேஸ்வர் பிரதாப் சஹியை, நவம்பர் 13- ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.