Skip to main content

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்..! 

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

Chennai Adyar Cancer Hospital President Santa passes away ..!


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா(93) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

 

சென்னை அடையாறு மருத்துவமனை தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் மருத்துவர் சாந்தாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  

 

இவர், 1955ஆம் ஆண்டு முதல் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர். இதில், 20 ஆண்டுகள் அவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவராக இருந்தார். துவக்கக்காலத்தில் மகப்பேறு மருத்துவராக இருந்த சாந்தா, பின் புற்றுநோய் துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார். டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் புற்றுநோய் மையத்தில் இணைந்து மருத்துவ சேவையாற்றியவர்.

 

புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ்பெற்றவர் மருத்துவர் சாந்தா. ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷன்’, ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர் சாந்தா. தமிழக முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர். அண்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை அளித்தவர்; பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்தியவர். மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு (படங்கள்)

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று, அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவாமி சிவானந்தா சாலை வழியாகச் சென்றார். அப்போது அங்கு வழியில் இருந்தவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 

 

Next Story

விழிப்புணர்வு பேருந்தைத் துவங்கி வைத்த அமைச்சர்! (படங்கள்)

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

 

இன்று (22.10.2021) சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு பேருந்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.