Skip to main content

எ.வ.வேலு மகனின் பிறந்தநாள்... வருங்கால எம்.எல்.ஏ என புகழாரம்!!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் இளைய மகன் எ.வ.கம்பன். இவர் மாநில தடகள சங்கத்தின் மாநில துணை தலைவராக உள்ளார். சில ஆண்டுகளாகவே கட்சியில் சாதாரண உறுப்பினராக இணைந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியாற்றச்சொல்லி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் அனுப்பிவைக்கப்பட்டு பணிகள் செய்தார்.

தொடர்ந்தார்போல் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதே கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட கழகத்தின் சார்பில் அறிவித்து அனுப்பிவைக்கப்பட்டார். அதிமுகவின் ஜாம்பவானாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் அதிமுக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சிட்டிங் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தல் பணியாற்றினார். கலசப்பாக்கத்தில் சேர்மன், துணை சேர்மன் பதவியை திமுக பிடிப்பது கடினம் எனச்சொல்லப்பட்ட நிலையில் அந்த அதிமுகவின் தடைகளை மீறி கலசப்பாக்கம் ஒன்றியம், புதுப்பாளையம் ஒன்றியத்தின் சேர்மன் பதவிகளை திமுக பிடித்தது. துணை தலைவர் பதவிகளையும் திமுக பிடித்தது. இந்த வெற்றியால் கட்சியில் ஒருதரப்பு கம்பன் தான் கலசப்பாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளர் என தங்களுக்குள் பேசிவந்தனர்.


 

AV Velu's son's birthday ... Praised as future MLA !!

 

இந்நிலையில் எ.வ.கம்பனுக்கு, பிப்ரவரி 22ந்தேதி பிறந்தநாள். திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கட்சி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு வந்துள்ள நிர்வாகிகள் அனைவரும் கம்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் கட்சியில் ஒருதரப்பு பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை சமூக வளைத்தளங்களான முகநூல், வாட்ஸ்அப்களில் வாழ்த்து செய்தியை பதிவிட்டு வருகின்றனர். அதில் வருங்கால கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுக்குறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர், கம்பனுக்கு கட்சியில் எந்த பதவியும் கிடையாது, அவர் சாதாரண உறுப்பினர் தான். அவருக்கு கட்சியினர் தரும் மரியாதை மா.செவின் மகன் என்பதற்காக தான். கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்க தன் மகனை கலசப்பாக்கம் தொகுதியின் கட்சி வேலைகளை பார்க்கச்சொல்லி பொறுப்பாளர் எனச்சொல்லி அனுப்பிவைத்தார். இது அதிகாரபூர்வ பதவி கிடையாது என்றாலும் அப்போதே முனுமுனுப்பு எழுந்தது. யாரும் வெளிப்படையாக பேசவில்லை. எம்.பி தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்று தந்தார், உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து சேர்மன் பதவியை பிடிக்க உதவி செய்தார், அதனையெல்லாம் பாராட்டுகிறோம். அதற்காக அவரை எம்.எல்.ஏ வேட்பாளராக விளம்பரப்படுத்துவதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

AV Velu's son's birthday ... Praised as future MLA !!


நாங்கயெல்லாம், கட்சி வேலையே செய்யலயா, அவருக்கு மட்டும் ஏன் இப்படி திட்டமிட்டு அவரை தவிர அந்த தொகுதியில் யாரும் இல்லாத மாதிரி பில்டப் தர்றாங்க. நாங்களும் தான் எங்களுக்கு தரப்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை வாங்கி தந்திருக்கோம், காலம் காலமா கட்சிக்காக உழைச்சி, ஒரு பதவிக்கு வர்றது எவ்வளவு செலவு செய்துயிருக்கோம் தெரியுமா?, கூட்டம் நடத்தறது, தலைவர்களை வரவேற்க விளம்பரம் தர்றது, கட்சியினருக்கு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கறதுன்னு எவ்வளவு செலவு செய்து இந்த இடத்துக்கு வந்துயிருக்கோம்.

 

AV Velu's son's birthday ... Praised as future MLA !!

 

கட்சியில் எந்த பதவியும் இல்லாம, கட்சிக்காக பத்து பைசா செலவு செய்யாம, அவுங்க அப்பா செலவு செய்யறதையும், கட்சியில் அவர் பதவியில் இருக்கறதையும், மேலிடத்தில் உள்ள செல்வாக்கை வச்சிக்கிட்டு இப்படி எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்படறது எந்த விதத்தில் சரி என என கேள்வி எழுப்பினர்கள். முதல்ல அவர் கட்சி பதவிக்கு வரட்டும், இன்னும் உழைக்கட்டும் அதுக்கப்பறம் சீட் கேட்கட்டும், தலைவர் ஸ்டாலின் பரிசீலனை செய்யட்டும் என்கிறார்கள்.

கம்பன் தரப்போ, ஆர்வ மிகுதியில் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் அப்படின்னு போட்டுட்டாங்க, அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் எனக்கேட்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.