Skip to main content

நாடாளுமன்ற தேர்தல்:தொகுதியை அறிவோம் – அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குள், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் என 3 தொகுதிகளில் அதிமுகவும், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி என 3 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றது.

 

election

 

1967ல் திமுக சம்மந்தம், 1971, 1977ல் காங்கிரஸ் அழகேசன், 1980ல் காங்கிரஸ் வேலு, 1984, 1989, 1991ல் காங்கிரஸ் ஜீவரத்தினம், 1996ல் தமாக வேலு, 1998 அதிமுக கோபால், 1999 திமுக ஜெகத்ரட்சகன், 2004ல் பாமக வேலு, 2009ல் திமுக ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றனர். இந்த தொகுதியில் 1977க்கு பின் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே காங்கிரஸ் வெற்றி பெற்றுவந்துள்ளது. 2004ல் வெற்றி பெற்ற பாமகவும் திமுக கூட்டணியில் இருந்ததால் வெற்றி பெற்றது.

 

 

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஹரி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஹரி பெற்ற வாக்குகள் 4,93,534, திமுக வேட்பாளர் இளங்கோவன் பெற்ற வாக்குகள் 2,52,768, பாமக வேட்பாளர் வேலு பெற்ற வாக்குகள் 2,33,762, காங்கிரஸ் நாசே.ராஜேஷ் பெற்ற வாக்குகள் 56,337 ஆகும்.

 

இந்த தொகுதியை பொருத்தவரை வன்னியர், தலித், முதலியார், இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர். விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில், அதற்கடுத்து நெசவு தொழிலாகும். மேலும் தொழில் வளர்ச்சி உள்ள தொகுதியிது. அரக்கோணத்தில் ரயில்வே தொழிலாளர்களும், ராணிப்பேட்டை பகுதியில் டெல் உட்பட பல தொழிற்சாலைகளும், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளதால் தொழிலாளர்கள் அதிகமும்முள்ள தொகுதியாகவும் உள்ளது.

 

தற்போது இந்த தொகுதியில் சுமார் 14 லட்சத்துக்கு 74 ஆயிரத்துக்கு 133 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் சுமார் 30 ஆயிரம் பேர் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. சுமார் 41 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தொகுதி மக்களுக்கான தேவைகள்…….

 

1.   அரக்கோணத்தில் மூடிவைக்கப்பட்டுள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையை மீண்டும் திறந்து,               உள்ளுர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

2.   சோளிங்கர் நகரில் உள்ள நரசிங்கபெருமாள் கோயில்க்கு ரோப் கார் அமைத்து தர வேண்டும்.

3.   ஆசியாவில் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை             நகரை தூய்மை நகராக மாற்ற வேண்டும்.

4.   அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

5.   திண்டிவனம் டூ நகரி இரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.

6.   சோளிங்கர் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க வேண்டும்.

 

கடந்த முறை எம்.பியாக, மத்தியஅமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன், சென்னை டூ பெங்களுரூவுக்கு எக்கனாமிக்கல் காரிடர் கொண்டு வருவதற்கான பணியை செய்து வெற்றி பெற்றார். அதன்பின் வந்த பாஜக ஆட்சி அதனை நிறைவேற்றவில்லை. அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துயிருந்தால் சுமார் 1 லட்சம் பேருக்கு நேரடியாக - மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கிறார்கள். அதனை சுட்டிக்காட்டி வாக்கு கேட்கவுள்ளார் என்கிறார்கள்.

 


தேர்தல் களத்தில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணியில் பாமகவின் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகிய இருவரும் மோதலில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.