Skip to main content

நடிகர் , நடிகைகள் இல்லாத தேர்தலா ? 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

கடந்த காலத் தேர்தல் நேரத்தில்  பிரச்சாரத்தில் நடிகர் ,நடிகைகளை ஈடுபடுத்தி மக்களை கவர்ந்து இழுத்தனர் .இதில் பெரும்பாலும் திமுக மற்றும்  அதிமுக கட்சிகள் பெருமளவில்  நடிகர் நடிகைகளை ஈடுபடுத்தினர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் பிரச்சார நேரத்தில் நடிகர் ,நடிகைகளே பிரச்சார பீரங்கிகளாக இருந்தனர். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடும் என்பதால் இவர்களைப் பயன்படுத்தினர் . கடந்த தேர்தலில் வடிவேலு , சிங்கமுத்து , விந்தியா  , சிம்ரன் , குஷ்பு , ராமராஜன் , கருணாஸ் ,பாக்கியராஜ் , செந்தில் , நமீதா ,  கோவை சரளா , தியாகு , குண்டு கல்யாணம், விக்னேஷ் இன்னும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .

 

actor


 

ramarajan



இப்பொழுது தேர்தல் என்றாலே பணம் , மது , பிரியாணி என்று வாக்காளர்களின் எண்ணமும் கொஞ்சம் மாறி இருப்பதால் இதற்க்கு செலவு பண்ணவே கட்சிகள் அதிகளவு பணத்தை செலவு செய்கின்றனர் . இது மட்டுமில்லாமல் பெரிய தலைவர்களின் பிரச்சாரங்கள் மற்றும் மாநாடுகளுக்கு இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது . இதனால் இந்த தேர்தலில் பெரிய அளவில் நடிகர்கள் ,நடிகைகளை ஈடுபடுத்தினால் இன்னும் செலவு அதிகம் ஆகும் என்பதால் பிரதான கட்சிகளான திமுகவும் , அதிமுகவும் இந்த முறை மிக குறைந்த அளவே நடிகர் , நடிகைகளை பயன்படுத்துகின்றனர் . இதனால் மக்கள் அதிகமாக எதிர் பார்த்த சினிமா நட்சத்திரங்கள் வராத காரணத்தால் கொஞ்சம் களையிழந்து காணப்படுகிறது . இதிலிருந்து வேட்பாளர்கள்  பிரச்சாரத்துக்கு செலவு செய்வதை குறைத்து வாக்காளர்களுக்கு  அந்த பணத்தை பயன்படுத்திக்  கொள்ளலாம் என்று திட்டம் போட்டிருக்கின்றனர் .
 

சார்ந்த செய்திகள்

Next Story

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Chief Minister honors Anna - kalaignar Memorial

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. இதனையொட்டி நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் நேற்று (17.04.2024) மாலை 4 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்ததால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.