Skip to main content

கெமிக்கல் தொழிற்சாலையில் ஆசிட் டேங்க்  உடைந்து விபத்து; அதிர்ச்சியில் மக்கள்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Acid tank burst accident in chemical factory

 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த முசிறி பகுதியில் சன்பிக்ஸ் என்ற தனியார் கெமிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு ரசாயனங்கள் மற்றும் ஆசிட் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆசிட்களை தேக்கி வைக்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை தோல் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிக்க பயன்படும் பாலி அலுமினியம் குளோரைடு ஆசிட் தேக்கி வைக்கப்பட்டிருந்த ராட்சத டேங்க் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்து காரணமாக ஆசிட் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக உருவாகும் புகையால் அப்பகுதியில் புகைமூட்டமாகக் காணப்பட்டது. டேங்க் உடைந்து வெளியான ஆசிட் தாக்கம் குறைவான கெமிக்கல் என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் பணியாற்றிய 7க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் எரிச்சல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட சிறு பாதிப்போடு பணியாற்றியவர்கள் உயிர் தப்பினர்.

 

Acid tank burst accident in chemical factory

 

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் 10 பேர் அடங்கிய குழுவினர் சுவாசக் கருவிகளைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் எம்-சாண்டை கொட்டியும் ஆசிட் வீரியத்தை மற்றும் வெளியாகும் புகையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலை அருகே குடியிருப்பு பகுதி இல்லாததால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அருகில் கல்குவாரி மற்றும் கிரஸ்சர்கள் செயல்பட்டு வருவதால் அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்