Skip to main content

பா.ஜ.க வேல் யாத்திரையில் சினிமா டான்ஸர்களின் குத்தாட்டம் – அதிர்ச்சியில் முருக பக்தர்கள்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

thiruvannamalai BJP Vel yatra made with cine artist dance

 

தமிழர் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தியதைக் கண்டித்தும், திமுகவின் மதவிரோதத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் இந்த வேல்யாத்திரையை நடத்துவதாக தொடக்கத்தில் அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன். கடவுள் முருகன் பெயரில் அறுபடை வீடுகளுக்கும் பயணமாகும் இந்த வேல் யாத்திரையில், பச்சை வேட்டி, காவி சட்டை, கையில் வேல், கழுத்தில் பச்சைத் துண்டுடன் பூமாலை என வலம் வருகிறார் முருகன். அசப்பில் பாதயாத்திரை செல்லும் முருகன் பக்தர்கள் போலவே நடந்துகொள்கிறார்.

 

அதைப் பார்த்து பக்தியுடன் தான் இந்த வேல் யாத்திரை நடக்கிறது என பலரும் நம்பினர். ஆனால், திருவண்ணாமலையில் நடைபெற்ற வேல் யாத்திரை தொடக்க விழாவை பார்த்தவர்கள், இது பக்தி யாத்திரை அல்ல, அரசியல் யாத்திரை என்கிற பேச்சை தொடங்கியுள்ளனர்.

 

நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு, திருவண்ணாமலை நகரில் இருந்து பாஜகவின் வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கூட்டத்தை திரட்ட பல வழிகளைக் கையாண்டனர் பா.ஜ.க நிர்வாகிகள். பணம் தந்து ஆட்களை அழைத்து வந்தது ஒருப்பக்கமென்றால், மேடைக்கருகே பொதுமக்களின் கூட்டத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என யோசித்தனர். சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் டான்ஸர்களை அழைத்து வந்து சாலையில் ஆடவைக்கலாம் என முடிவு செய்தனர். சென்னையில் இருந்து சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் இளம் பெண் டான்ஸர்களையும், ஆண் டான்ஸர்களையும் அழைத்து வந்து, வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் சாலையில் ஆடவைத்தனர். அவர்களும் கேரளா சென்டை மேளத்தின் அடிகளுக்கு ஏற்ப நடனம் ஆடினர்.

 

thiruvannamalai BJP Vel yatra made with cine artist dance

 

முருகன் பெயரில் யாத்திரையை நடத்திக்கொண்டு, குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களான இளம்பெண்களை நடனமாட வைத்தது உண்மையான முருக பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. முருக பக்தர் போல் பா.ஜ.க தலைவர் முருகன் நடந்துகொள்வதும் நாடகம் தானா என்கிற கேள்வி ஆன்மிகவாதிகளிடம் எழுந்துள்ளது.

 

பாஜகவின் வேல் யாத்திரை, பக்தியுடன் நடைபெறும் வேல் யாத்திரை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குத்துப் பாட்டு யாத்திரையாக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் பக்தர்களும் பொதுமக்களும்.

 

படங்கள்: விவேகானந்தன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.