Skip to main content

வாரம் 200 ரூபாய் கூலிக்கு 12 குழந்தைகள் உட்பட 22 பேர் கொத்தடிமை!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மணிமங்களம் கிராமத்தில் தளாளன் என்பவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழிப்பண்ணையில் 6 இளைஞர்கள் மனைவி, பிள்ளைகளோடு தங்கி வேலைபார்க்கிறார்கள் என்கிற தகவல் சென்னையில் இயங்கும் இண்டர்நேஷ்னல் ஜஸ்டீஸ் என்கிற அமைப்பின் வழியாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துக்கு தரப்பட்டது.

labor

 

 


அந்த தகவலின் அடிப்படையில் செய்யார் சப்-கலெக்டர் அன்னம்மாள், அந்த கோழிப்பண்ணைக்கு சென்று பார்த்தபோது கோழிப்பண்ணையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா கன்னிக்கோயில் கிராமத்தை சேர்ந்த 22 வயதான ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர், 24 வயதான முருகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர், திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 21 வயதான சங்கர் அவரது சகோதரர் 20 வயதான வல்லரசு, பருவதம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 18 வயதான ராஜேஷ், அவரது மனைவி சித்ரா, திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன், அவரது 14 வயது மகள் பவித்ரா என 22 பேர் இருந்தனர். அதில் 12 குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது. அதில் ஒருப்பெண் பிறந்து ஓரிரு மாதங்களே ஆன கைக்குழந்தையோடு இருந்தது மனதை உருக்குவது போல் இருந்தது.

labor


அவர்கள் தங்கியிருந்த வீடு பன்றி தொழுவம் போல் இருந்தது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர்களை கோழிப்பண்ணை வேலைக்கு என அழைத்து வந்து விவசாய வேலையையும் வாங்கியுள்ளார்கள். சரியான உணவு இல்லாததால் குழந்தைகள் நோஞ்சான் போல் இருந்தனர். இவர்களுக்கு வாரம் 200 ரூபாய் கூலி வழங்கியது தெரியவந்துள்ளது. தினசரி தினமும் 30 ரூபாய் சொச்சத்துக்கு 24 மணி நேரமும் வேலை வாங்கியுள்ளார்கள் கல்நெஞ்சர்கள்.

 

labor

 

 


10 ஆயிரம் முன்பணம் வாங்கியுள்ளோம், 4 வருடமாக இங்கு வேலை செய்கிறோம், எப்போதாவுது யாராவது ஒருவர் ஊருக்கு போய் வருவோம் எனச்சொல்ல அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். அவர்களை வந்தவாசி தாலுக்கா அலுவலகத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் தயாளன், மேலாளர் சஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர் போலிஸார். இவர்களை காப்பாற்ற பேரமும் நடக்கிறது.


கொத்தடிமைகளாக இருந்தவர்களுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிதி தந்து அவர்களது ஊருக்கு அனுப்பிவைத்தனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.