Skip to main content

கத்தாரில் திமுக கிளை - துவக்கி வைத்தார் பொன்முடி

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

 

கத்தார் தலைநகரம் தோகாவில் 11.01.20 அன்று நடைபெற்ற கத்தார் திமுக கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சைதை மகேஷ்குமார் முன்னிலையில்  முதன் முறையாக வெளிநாடுகளில் செயல்படும் திமுகவின் அதிகாரப்பூர்வ முதல் கிளை அமைப்பாக திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், தமிழக மேனாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். 


இந்த விழாவில் பொன்முடியிடம் கத்தார் திமுகவின் உறுப்பினர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பொன்முடி, திமுகவின் கொள்கைகள் மற்றும் திமுக கடந்து வந்த பாதைகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது குறித்து பேசினார். 

 

சார்ந்த செய்திகள்