Skip to main content

கோஷ்டி அரசியலால் நெல்லையில் நிறுத்தப்பட்ட உட்கட்சித் தேர்தல்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

இதுவரை 14 உட்கட்சித் தேர்தலை சந்தித்து ஜனநாயகத்தைக் கட்டிக்காத்த திமுக, ஸ்டாலின் தலைமையிலான முதல் தேர்தலாகவும், கட்சியின் 15- வது உட்கட்சித் தேர்தலாகவும் தமிழகமெங்கும் தேர்தலை நடத்தி வருகின்றது. இந்நிலையில், தங்களுக்குள் எழுந்த கோஷ்டி அரசியலால் தேர்தலையே நிறுத்தி வைத்து தலைமையை சிக்கலில் ஆழ்த்தியுள்ளனர் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர்.


ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெறவுள்ள திமுக உட்கட்சித் தேர்தலில், இன்று முதல் தமிழகமெங்கும் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி கிளைகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகின்றது. கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட திருநெல்வேலி திமுகவில் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆவுடையப்பனும், மேற்கு மாவட்ட செயலாளராக சிவபத்மநாபனும், மத்திய மாவட்ட செயலாளராக அப்துல்வகாப்பும் செயலாற்றி வருகின்றனர். 


இந்நிலையில் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மானூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட 180 கிளைக் கழகத்திற்கும் அவைத்தலைவர், செயலாளர், மேலவை பிரதிநிதி, பொருளாளர், துணை செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு விருப்பமனு பெறப்படும் இடம், அதற்கான பொறுப்பாளர்களையும் முன்னதாக அறிவித்துள்ளார் மாவட்ட செயலாளரான அப்துல்வகாப். இவ்வேளையில், மாநிலத்திலேயே இங்கு மட்டுமே கிளைக்கழகத்திற்கான விருப்பமனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

"40 கிளைக்கழகங்களைக் கொண்ட மானூர் தெற்கு ஒன்றியத்தைப் பொறுத்தவரை விருப்பமனுக்கள் பெறக்கூடிய இடமாக திருமண மண்டம், சமுதாயக்கூடங்கள் என மூன்று இடத்தினை முன்பே அறிவித்தனர். ஆனால் இன்று அறிவிப்பிற்கு மாறாக சுத்தமல்லி விலக்கில் உள்ள ஒன்றிய செயலாளரின் அலுவலகம், வெள்ளாளங்குளத்திலுள்ள ஒரு வீடு மற்றும் நடுக்கல்லூரில் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் மனுக்களை பெற ஆரம்பித்தனர். விருப்ப மனுக்கட்டணமாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.20 என்பதனை தவிர, ஏனைய பதவிகள் அனைத்திற்கும் விருப்ப மனுக்கட்டணம் ரூ.100. விருப்ப மனுவினை வாங்கிய பொறுப்பாளர்கள் மனுக்கட்டணத்திற்கு ரசீதை கொடுக்கவில்லை. 


மத்திய மாவட்டத்திற்குட்பட்ட 180 கிளைகள் கொண்ட இரண்டு ஒன்றியங்களிலும் இதே நிலைமை தான். தங்களுக்கு சாதகமான இடத்தினை தான் மாற்றினார்கள் என்றால் போட்டியிட்டோம் என்பதற்கு ஆதாரமாக இருக்க வேண்டிய ரசீதையும் தர மறுக்கின்றனர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தரப்பு ஆட்கள். இதில் எங்கிருக்கின்றது உட்கட்சி ஜனநாயகம்..? முன்னாள் எம்எல்ஏ. மாலைராஜாவிற்கும், மாவட்ட செயலாளர் அப்துல்வகாப்பிற்கும் நடக்கும் கோஷ்டி அரசியலால் உண்மையான தொண்டர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்தல் நின்று போனது தான் மிச்சம்." என்கிறார் நெல்லை மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்.

 

இதே வேளையில், "ரசீது இருந்தால் மட்டுமே நாளை பொறுப்பாளர்களுக்கான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். இல்லையென்றால் விருப்பமனு நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு" என்பதால் விருப்பமனு செலுத்திய சிலர் ஒரு குயர் நோட்டைக் கொண்டு வந்து பணம் செலுத்தியதற்கு பொறுப்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றது தனிக்கதை. எனினும், திமுக தலைவராக ஸ்டாலின் வருகைக்கு பின் நடைபெறும் உட்கட்சி தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் விவகாரம் தலைமை வரை சென்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது