Skip to main content

ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த கே.பி.முனுசாமி! பாஜகவில் இணைகிறாரா? அதிமுகவில் பரபரப்பு!

Published on 24/09/2019 | Edited on 25/09/2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்த நேர்காணலும், அதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன.

 

 KP Munusamy boycotts advisory meeting Joining the BJP? Excitement in AIADMK!


அதிமுக முக்கிய விஐபிக்கள் பலரும், 'தங்களுக்கே சீட் கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.

 இந்த நிலையில், முக்கிய பிரச்சனை ஒன்று வெடித்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுகவினர், "வேட்பாளர் நேர்காணல் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி கலந்து கொள்ளவில்லை. பொதுவாக, அதிமுகவில் நடக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு தனது முடிவினை அழுத்தமாக வலியுறுத்துவார் கே.பி.முனுசாமி. அவரது கருத்துக்கள் அனைவராலும் பரிசீலிக்கப்படும்.

அப்படி இருக்கையில் முக்கிய நிகழ்வாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர் தேர்வு குறித்து சில ஆலோசனைகளை தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருந்திருக்கிறார். ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்.

 

 KP Munusamy boycotts advisory meeting Joining the BJP? Excitement in AIADMK!


அதே சமயம்,  தமிழகத்தில் பெரும்பாண்மை சமூகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியின் விவிஐபிக்களை வளைக்கும் முயற்சியை அண்மைக் காலமாக பாஜக  மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கே.பி.முனுசாமியை பாஜக வளைத்துவிட்டதோ என்கிற சந்தேகம் இருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த கூட்டத்தை கே.பி.முனுசாமி புறக்கணித்திருப்பதை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் முயற்சித்தனர். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.