Skip to main content

ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க... இரு மாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

கடந்தாண்டு புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஜோசப் கொலை, அதைத்தொடர்ந்து பழிக்கு பழியாக சில நாட்களுக்கு முன்பு காலாப்பட்டு சந்திரசேகர் கொலை மற்றும் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள், இரு மாநில எல்லைகளிலும் இடம் மாறி, மாறி தப்பித்து வருகின்றனர். மேலும் சமூக விரோத குற்றங்களையும் அரங்கேற்றி வருகின்றனர். 


அதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்கவும்,  புதுச்சேரி காமராஜ் நகர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் அசம்பாவிதங்கள், சட்ட விரோத செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் இரு மாநில போலீசார் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில காவல்துறை அதிகாரிகள், கடலுார், விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

rowdy suppress the atrocities of the bully ...   Two state cops decide to work together!


புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தலைமையில் நடந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலுார் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், புதுச்சேரி கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் எல்லை பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் காண்பது, தலைமறைவு குற்றவாளிகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வது என்றும், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மது கடத்தப்படுவதைத் தடுக்க இருமாநில போலீசார் இணைந்து செயல்படுவது என்றும் காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.


மேலும் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை வலுப்படுத்துவது, பரிசு பொருட்கள் கடத்திச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் பதுங்கியிருந்தால் தகவல் தெரிவிக்கவும், புதுச்சேரி ரவுடிகள் தமிழகத்தில் பதுங்கியிருந்தால், அவர்களை கைது செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ரவுடிகளை ஒழிப்பதில் இரு மாநில போலீசாரும் தகவல் பரிமாற்றம் மூலம் இணைந்து செயல்படுவது என்று கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.