Skip to main content

தடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி...

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

பூர்வா என்னும் விரைவு ரயில் ஹவ்ராவிலிருந்து புது டெல்லிக்கு இயக்கப்படுகிறது. பிரக்யராஜ்ஜில் இருந்து புறப்பட்ட ரயில் அதிகாலை 1 மணியளவில் ரூமா என்ற கிராமம் வழியாக செல்லும்போது தண்டாவளத்தில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 

poorva train

 

 

இந்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் ஸ்மிதா வட்ஸ் சர்மா, “காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ உபகரணங்களுடன் விபத்து மீட்பு ரயில் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
 

இந்த விபத்தின் காரணமாக கிழக்கு பகுதியிலிருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரயில் பயணிகள் பேருந்து மூலமாக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் கான்பூரில் இருந்து டெல்லிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்