Skip to main content

பான் கார்டுடன் ஆதார் இணைப்பு - மார்ச் 31 கடைசி, தவறினால் ரூ. 10,000 அபராதம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அக்டோபர் 1 முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்திருந்தது. அதன்பிறகு புதிதாக விண்ணப்பித்தே பான் கார்டு பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகும் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஆதார் இணைப்பிற்கு கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அப்படி இணைக்காவிட்டால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. http://incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.

 

சார்ந்த செய்திகள்