Skip to main content

அபிநந்தனை வைத்து பாகிஸ்தான் வெளியிட்ட புதிய வீடியோ...  இதுதான் தாமதத்துக்குக் காரணம்?

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவுக்கு காதலர் தினமாக அல்லாமல் அதிர்ச்சி தரும் தீவிரவாத தாக்குதல் நடந்த தினமானது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடையச் செய்து உலகையே கவனிக்க வைத்த புல்வாமா தாக்குதலில் நாற்பது வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து வந்த வேளையில், இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வந்தது. பிப்ரவரி 26ஆம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை வான் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் முன்னூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தகவல் தரப்பட்டது.

 

abinandhan video



இந்நிலையில் பிப்ரவரி 27 அன்று இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தாக்கப்பட்டதால் செயலிழந்து விமானத்திலிருந்து வெளியேறி பாராஷூட் மூலம் குதித்த இந்திய விமானப்படை விமானி 'விங் கமாண்டர்' அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கியதாக தகவல் வெளிவந்தது. பாகிஸ்தான் தாக்கவில்லை, விமானம் செயலிழந்ததாலேயே அபிநந்தன் குதித்தார் என்றும் செய்திகள் வெளிவந்தன. அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியானது. அவர்களிடமிருந்து அபிநந்தனை மீட்டு பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்தது. பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவர் அபிநந்தனை விசாரிக்கும் வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் தன்னை நாகரிகமாக நடத்துவதாகத் தெரிவித்திருந்தார் அபிநந்தன். அந்த வீடியோவில் அவர்களது கேள்விகளுக்கு அபிநந்தன் பதிலளித்த விதமும், அந்த சூழ்நிலையை அபிநந்தன் அணுகிய முறையும் அவர்கள் கேட்கும் தகவல்களை தர உறுதியாகவும் மென்மையாகவும் மறுத்த விதமும் இந்தியா முழுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அபிநந்தன் மீண்டும் இந்தியா வரவேண்டுமென பிரார்த்தனைகளும் வேண்டுகோள் வைப்பதும் நிகழ்ந்தன.

மறுநாள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அமைதி நிலவ வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தார். மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர். நேற்று மாலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லை வழியாக அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று காலையிலிருந்தே எதிர்பார்ப்பில் இருந்தது இந்தியா. வாகா எல்லையில் மக்கள் குவிந்தனர். மாலை வருவார், வருவார் என மக்களும் செய்தியாளர்களும் காத்திருக்க, வருகையில் தாமதம் ஏற்பட்டது. இரவு சுமார் 9.20 க்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன். மிடுக்கான நடை, தனது ஸ்டைலான மீசையுடன் நடந்து வந்த அபிநந்தனை மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். செய்தியாளர்களை சந்தித்த இந்திய அதிகாரிகள் தாமதத்திற்கான காரணம் குறித்து தங்களுக்கு தெரியவில்லை என்று கூறி சிறிது நேரத்திலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துச் சென்றனர்.

இப்படியிருக்க, நேற்று இரவு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு சற்று முன்பு பாகிஸ்தான் ஊடகங்கள் வாயிலாக ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தான் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது, விமானம் சுடப்பட்டது, விமானத்தில் இருந்து கீழே குதித்தது, பின்னர் ஒரு கும்பலிடம் சிக்கியது, அங்கிருந்து ராணுவ வீரர்கள் இருவர் தன்னை மீட்டது என நிகழ்வுகளை வரிசையாக சொல்கிறார் அபிநந்தன். பாகிஸ்தான் ராணுவம் தனக்கு முதலுதவி அளித்ததாகவும், பின்னர் சிகிச்சை அளித்ததாகவும் குறிப்பிடும் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் அணுகுமுறையை பாராட்டி அது அமைதி தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சில ஊடகங்களில் வந்த செய்திகள் குறித்தும் விமர்சிக்கிறார். சிறிது நேரம் மட்டுமே ஓடும் அந்த வீடியோ பல முறை கட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அபிநந்தனை விடுவிக்கும் இம்ரானின் அறிவிப்பால் நல்ல வகையில் பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் இந்த வீடியோ கேள்விகளை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவை தயார் செய்ததில்தான் தாமதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.              

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
CBI raids house of ex-governor who criticized PM Modi who Pulwama incident issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

“இந்திய அணியை வீழ்த்தினால் டேட்டிங் வர ரெடி” - பாகிஸ்தான் நடிகை 

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

 Pakistani actress says Ready to go on a date if beat the Indian team

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

இதில் கடந்த வாரம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அணி வெற்றி பெற்றது. இதில், பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பினர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.  

 

இந்த நிலையில், இன்று (19-10-23) நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், வங்க தேசம், இந்திய அணியை வீழ்த்தினால் வங்கதேச வீரர் ஒருவருடன் இரவு விருந்து (டேட்டிங்) சாப்பிடுவதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் நடிகையான சேஹர் ஷின்வாரி என்பவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “இந்தப் போட்டியில் என்னுடைய வங்காளதேச சகோதரர்கள் எங்களுக்காக பழி வாங்குவார்கள். இந்தியாவை அவர்கள் வீழ்த்தினால், நான் டாக்காவுக்கு சென்று அங்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இரவு விருந்துக்கான டேட்டில் (டின்னர் டேட்) கலந்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.