Skip to main content

கேரளா - பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக.28 வரை விடுமுறை

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
Kerala


 

 

கேரளாவில் பருவ மழை பெய்து வருகிறது. 14 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரையோர மக்களை பேரழிவுக்கு தள்ளி இருக்கிறது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை, பேரிடர் மீட்புக்குழு முப்படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

 

 

இந்த நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்