Aam aadmi letter to Election Commission Kejriwal's life is in danger because of PM

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இன்று (20-05-24) தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதில் கூறியதாவது, “தற்போதைய புகார், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபரின் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பானது. அவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் தெளிவான செய்தியுடன் டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியை சிதைத்துள்ளார். படேல் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இதே போன்ற மிரட்டல் செய்திகள் எழுதப்பட்ட படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த மிரட்டல் செய்திகளில் டெல்லி முதலமைச்சருக்கு எதிரான தகாத வார்த்தைகளும் உள்ளன.

Advertisment

அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். பா.ஜ.கவை ஆளும் பிரதமர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அட்டகாசம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் பிரதமரால் இயக்கப்படுகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தீங்கு விளைவிக்க நரேந்திர மோடி எந்த எல்லைக்கும் செல்லலாம். அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு நரேந்திர மோடி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.