Skip to main content

பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணைத் திருமணம் செய்த இளைஞர்!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

gfn


இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் கடும் சிரம்மத்தைச் சந்தித்து வருகிறார்கள். பலர் உணவுக்காகப் பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்று அது திருமணத்தில் முடிந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. உத்தரப் பிரத்சத்தை சேர்ந்தவர் பிரபலத் தொழில் அதிபர் லலித் பிரசாத். இவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அவரிடம் ஒட்டுநராக வேலை பார்ப்பவர் அணில். இந்த ஊரடங்கு நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று முடிவு செய்த லலித் பிரசாத் உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து, தனது ஓட்டுநர் அணிலை அழைத்துக்கொண்டு சாலை ஓரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்துள்ளார். 
 


அப்போது அங்குப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண் அணிலிடம் வந்து தன்னுடைய தாய்க்கு ஒரு பொட்டலம் உணவு கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அந்தப் பெண்ணைப் பார்த்த அணில், எதற்காக இங்கு நின்று பிச்சை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அவரும் தன்னுடைய குடும்ப நிலைமைகளை அவரிடம் எடுத்து கூறியுள்ளார். இதனால் பரிதாபப்பட்ட அவர், நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் அம்மாவும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவே நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் உ.பி-யில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கையில் ரூ.1.14 லட்சம் இருந்தும் பசியால் உயிரிழந்த சோகம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Tragedy of lost his lives of hunger even with Rs. 1.14 lakh in hand

குஜராத் மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்த நபர் பசியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர், வல்சாத் என்ற பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர், கடந்த இரண்டு நாட்களாக காந்தி நூலகம் அருகே உள்ள சாலையோரத்தில் படுத்திருந்ததைக் கண்ட அந்தப் பகுதி கடைக்காரர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரை மீட்டு வல்சாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து, அந்த நபருக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில், அவர் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால்தான் இறந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, அந்த நபரிடம் இருந்த சிறு பிளாஸ்டிக் பையை எடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த பையில், 1.14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதில், ரூ.500 நோட்டுக்கள் 38, ரூ.200 நோட்டுக்கள் 83, ரூ.100 நோட்டுக்கள் 537, மற்றும் ரூ.10, 20 நோட்டுக்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கையில் 1.14 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் சாப்பிடாமல் இருந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.