Skip to main content

‘ஜனநாயக அமைப்புகள் சீர்குலைக்கப்படுகிறது’- காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ்

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (18/07/2019) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அவையை இன்று (19/07/2019) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவின் மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தும் வரை சட்டப்பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்.
 

parliament

 

 

அதனைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்கள், இரவு உணவை சட்டப்பேரவை வளாகத்தில் அருந்தி, அங்கேயே உறங்கினர். சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் உறங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கிய நிலையில், ஆளுநர் உத்தரவை சபாநாயகர் ஏற்காததால், ஆளுநர் மீண்டும் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 

அந்த கடிதத்தில் இன்று (19/07/2019) மதியம் 01.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு கெடு விதித்துள்ளார். மேலும் சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்நிலையில், கர்நாடக அரசியல் சூழ்நிலை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 

மேலும், கர்நாடகாவில் எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் சௌகத்யா ரே  ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை மக்களவையில் அளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்