Skip to main content

பொது தேர்வுக்களுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய சி.பி.எஸ்.இ நிர்வாகம்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

சி.பி.எஸ்.இ (CBSE- CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 750-ல் இருந்து ரூபாய் 1,500 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கூடுதல் பாடத்துக்கான தேர்வு கட்டணம், ஒரு பாடத்திற்கு ரூபாய் 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பார்வை திறனற்ற மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

பட்டியல் இன மாணவர்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி.) 5 பாடங்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 50-ல் இருந்து ரூபாய் 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதல் பாடத்துக்கு தேர்வு கட்டணம், முன்பு இல்லாமல் இருந்தது. தற்போது, கூடுதல் பாடத்துக்கு தலா ரூபாய் 300 செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பதிவு செய்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 5,000 இருந்து ரூபாய் 10,000 ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் பாடத்துக்கான கட்டணம் ரூபாய் 1,000-ல் இருந்து ரூபாய் 2,000 ஆக அதிகரித்துள்ளது.
 

CBSE 10TH, 12TH BOARD EXAM FEE CHANGED DELHI CBSE ANNOUNCED

 




ஏற்கனவே மாணவர்களிடம் சி.பி.எஸ்..இ பள்ளிகள் பொது தேர்வுக்கான கட்டணங்களை பெற்ற நிலையில், புதிய தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஏற்கனவே தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தால், புதிய கட்டணத்தின் படி மீதமுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் தேர்வுக்கு அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.  சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இத்தகைய அறிவிப்பால், சி.பி.எஸ்.இ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். 





 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.