Skip to main content

டிராக்டர் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 17 பெண்கள் பலி !!

Published on 24/06/2018 | Edited on 24/06/2018

தெலுங்கானாவில் டிராக்டர் வாய்க்காலில் கவிழ்ந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

தெலுங்கானாவிலுள்ள புவனகிரி மாவட்டம் யாதாத்ரி என்ற கிராமத்தில் விவசாய பணிக்காக 20-க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து சென்ற டிராக்டர் ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் 17 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

 

accident

 

 

 

இன்று காலை விவசாய பணிகளுக்காக பெண்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த டிராக்டர் ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மாட்டின் மீது மோதவிருந்தது, அதை சுதாரித்த டிராக்டர் டிரைவர் உடனே வண்டியை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மறுபுறம் இருந்த ஓடையில் டிராக்டர் தடம்புரண்டு தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த பெண்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர். 

 

accident

 

இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் போலீசார் உடனடியாக சடலங்களை மீட்டு கரையில் சேர்ந்தனர். இந்த விபத்தில் பலர் படும்காயமும் அடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள், குழந்தைகள் கதறும் காட்சிகள் மிகுந்த சோகத்தை தருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. அதேபோல் ஆந்திராவில் தனூர் மாவட்டத்தில் அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்