Skip to main content

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றமே துணைபோகிறது: கோழைத்தனமான உத்தரவு: திட்டமிட்ட நாடகம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published on 04/05/2018 | Edited on 05/05/2018
PRPandian interview


 

காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் விதித்த கெடுவின் அடிப்படையில் செயல்திட்ட வரைவை மத்திய அரசு சமர்பிக்கவில்லை. பிரதமர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகா சென்று விட்டார். எனவே, கர்நாடகத் தேர்தல் முடியும் வரை அவகாசம் வேண்டுமென்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
 

இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகம். நேற்று (புதன்கிழமை) மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை நடந்தது. இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் வழக்கில் கால அவகாசம் கேட்கிறார்கள். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு செய்த சட்டவிரோத துரோக நடவடிக்கையை மூடி மறப்பதற்கு கர்நாடகவில் 4 டி.எம்.சி தண்ணீர் விடுங்கன்னு ஏன் கர்நாடவை கேட்கிறார்கள். இது மத்திய அரசு நடவடிக்கையை மற்றும் துரோகத்தை மூடி மறைப்பதற்கான செயல்.
 

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு என்றைக்கு வெளியிடப்பட்டதோ அன்று முதல் காவிரி குறித்து முழு அதிகாரமும் மத்திய நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நீர் வளத்துறை ஆணையார் செயலாளருக்குதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தண்ணீரை மத்திய நீர்வளத் துணை ஆணையர்தான் திறந்து விட வேண்டும். 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் இது எல்லாம் நடக்கும். அதை அமைக்காதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது. தமிழக போராட்டங்களை திசைதிருப்புவதற்க்கான முயற்சிதான் இது. 
 

கர்நாடக முதலமைச்சர் சொல்லுகிற கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் தான் அரசாங்கம் செயல்படுகிறது. காவிரிக்காக முதலமைச்சருக்கு தனி பொறுப்பு அளிக்கிறதா? மாநில தலைமை செயலாளர் நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்த முடியுமா? கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை வழங்குகிறதா? எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல் ஒரு கோழைத்தனமான உத்தரவுதான். 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுகிற அதிகாரபூர்வ அமைப்பு மத்திய அரசின் நீர் வளத்துறை. அத்துறையின் ஆணைய செயலாளரை அழைத்து நீதிமன்றம் விசாரித்துள்ளதா? பிரதமர், அமைச்சர்கள் இவர்களை காரணம் காட்டி ஒரு அரசாங்கம் தப்பிக்க முடியுமா? அரசியல் அமைப்பு சட்டப்படி பயப்பட வேண்டிய ஐ.ஏ.ஏஸ் அதிகாரி, அவர் தன் கடமையை தவறும்போது அதிகாரி மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அவர் என்ன விளக்கம் அளித்துள்ளார். சட்டத்தில் இடம் இல்லையா? நீர் வளத்துறை ஆணையருக்கு, செயலாளருக்கு அதிகாரம் இல்லையா? நீதிமன்றம் நடவடிக்கை எல்லாம் ஒரு கண்துடைப்பாக இருக்கிறது. அரசியல் காரணங்களை ஏற்க முடியாவிட்டால் நீர் வளத்துறை செயலாளரை விசாரிக்க வேண்டும். 
 

பிரதமர் வாய்ப்பு அளிக்க விட்டால் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஏன் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வளவு நெருக்கடியான சூழல் வருகின்றபோது தென் மாநிலங்களை சேர்ந்த நான்கு முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கும்போது இவர் போய் ஏன் கலந்து கொண்டார். அப்ப அவர் யாருக்காக முதலமைச்சர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கால தாழ்த்தியதாக கூறி அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வந்துவிட வேண்டியது தானே.  மத்திய அரசோடு சேர்ந்து உச்சநீதி மன்றம், மாநில அரசும் நாடகமடுகிறது. 
 

மத்திய நீர்வளத்துணை ஆணையர் இதுகுறித்து விளமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும். தீர்ப்பை 8ம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள் என்றால் இது ஒரு திட்டமிட்ட நாடகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை நிறைவேற்ற மறுத்தால் இந்தியாவின் வரைப்படத்துகுள் தமிழ்நாடு இருக்கிறதா என்ற கேள்விக்குறி வந்துவிடும். ஏற்கனவே தமிழ் நாடு என்று தான் பெயர் இரு இருக்கிறது. பேருக்கு ஏற்று செயல்படும் நிலை வரும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.