Skip to main content

இனிப்பிற்கே இனிப்பு... தனித்துவம் பெற்ற கரிசல் மண் கடலை மிட்டாய்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

kovilpatti kadalai mittai

 

போலியான பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாகவும், பொருளுக்கு சிறப்பு மதிப்புக்கூட்டும் விதமாகவும் இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வழங்கப்படும் புவிசார் குறியீடு இந்த முறை கிடைத்திருப்பது மண் மணம் சார்ந்த, நஞ்சற்ற ரசாயனமற்ற கரிசல் மண் கடலை மிட்டாய்க்காக.!!!


“புள்ளைக வந்துருக்கு.! ஏதாவது இனிப்புக் கொடுக்கலாம்னு நினைக்கின்றேன்." என தான் கொண்டு வந்த பனைவெல்லத்துடன் நிலக்கடலைப் பருப்பை உடைத்து பனை ஓலைக் கொட்டானில் கொட்டிக் கிளறிக் கொறித்த வேளையில் உருவானது தான் இந்த கடலை மிட்டாய் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
  kovilpatti kadalai mittai



1920ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொன்னம்பல நாடாரால் தொழிற் முறையாக அறியப்பட்ட இந்தக் கடலை மிட்டாய் தொழில் இன்று 200க்கும் அதிகமான தொழிற்கூடங்களாக பெருகி 5000 தொழிலாளர்களுடன் பல்கி பெருகி தனி அடையாளமாகியுள்ளது, .எனினும், மண்ணில் விளையும் பொருட்களை கொண்டே தயாரிக்கப்படும் இனிப்பு தின்பண்டமான இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறீயீடு இருந்தால் நன்றாக இருக்குமே.? என்ற கோரிக்கைகள் எழுந்தன.


இதனால் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வேண்டுமென கடந்த 3.7.2014 கோவில்பட்டி சப்- கலெக்டராக இருந்த விஜய கார்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் அவ்விண்ணப்பம் தேக்க நிலை அடையவே, சில மாற்றங்களை செய்து கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கம் என்ற பெயரில் மீண்டும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 100 வருடங்களுக்கு பின்பு 30-04-2020 அன்று தனித்துவமிக்க புவிசார் குறீயீட்டைப் பெற்றிருக்கின்றது கரிசல் மண்ணின் மாசற்ற இனிப்பான கடலை மிட்டாய்..
  kovilpatti kadalai mittai


“தாமிரபரணி தண்ணீர், மண்டை வெல்லம், கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, மண்ணின் ஈரப்பதம் இவைதான் கோவில்பட்டி கடலை மிட்டாய்.! இந்த கடலை மிட்டாய்க்கென வரையறுக்கப்பட்ட பகுதிகளிலிருந்துதான் நிலக்கடைலையையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்கின்றார்கள்.


மாறாக புதிய இடத்திலிருந்து வரும் எந்த பொருளையும் ஏற்பதில்லை இவர்கள். கடலை மிட்டாய்க்கென தேவைப்படும் முதல்ரக வேர்க்கடலை பருப்பை இவர்கள் கொள்முதல் செய்வது கரிசல் மண் பூமியான கோவில்பட்டி மற்றும் அதனின் சுற்று வட்டாரப் பகுதிகளான அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில் மற்றும் கழுகுமலை ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் கடலைகளையே.! மிட்டாய்க்காக தேர்ந்தெடுக்கப்படும் உயர்தர வேர்க்கடலைகள் முதலில் தோல் பகுதி எடுக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டு அதன் பின் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, அதனின் பொக்குகளை நீக்கிய பின்னரே கடலை மிட்டாய்க்கு தயாராகின்றது.  

இதனுடன் சேரும் இனிப்பு முதல் தரமான மண்டை வெல்லமே.! மாறாக எக்காலத்திலும் அச்சு வெல்லத்தை சேர்ப்பதில்லை என்கிறார்கள். இந்த இரண்டுடன் சேரும் தாமிரபரணி தண்ணீரும், கோவில்பட்டி காற்றின் ஈரப்பதமுமே இதனின் சுவைக்கும், தரத்திற்கும் அடையாளம். இதனாலேயே கோவில்பட்டி கடலைமிட்டாய் சுவைக்கு உலக அளவில் விற்பனை சந்தை உள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள புவிசார் குறியீட்டால் தொழில் வளம் பெருகி எங்களை மென்மேலும் உயர்த்தும்." என்கின்றனர் இதனின் தயாரிப்பாளர்கள்.

 


 

Next Story

செப்டம்பர் 25இல் மதிமுக ஆர்ப்பாட்டம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

MDMK on September 25

 

மதிமுக சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த அதிநவீன ரயிலை பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 24) தொடங்கி வைக்கிறார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு மதியம் 1:50 மணிக்குச் சென்றடையும். 652 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே சமயம் மறு மார்க்கமாகச் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2:50 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:40 மணிக்குத் திருநெல்வேலிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே சமயம் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்களைத் தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டு இருந்தது. அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி சொகுசு வகுப்புக்கு ரூ. 3,025 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு, ஜிஎஸ்டி, அதிவிரைவு கட்டணம், முன்பதிவு என அனைத்துக் கட்டணங்களும் அடங்கும். அதேபோன்று சாதாரண ஏசி சேர் கேர் கட்டணம் ரூ. 1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி மதிமுக சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி கோவில்பட்டி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

அவசரத்துக்கு ஏடிஎம் வந்தா இப்படியா? - அதிர்ச்சியில் உறைந்த ஸ்விகி ஊழியர்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 A twenty rupee note instead of 200 rupees came in the ATM

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்தில் 200 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 'ஒன் இந்தியா' என்ற தனியார் ஏடிஎம் மையத்தில் ஸ்விகியில் வேலை செய்து வரும் ஐயப்பன் என்பவர் 3,500 பணம் எடுத்துள்ளார். ஆனால் 3,140 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மிஷினில் இருந்து வெளியே வந்துள்ளது. 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ந்த ஐயப்பன் புகார் அளித்தார். ஏற்பட்ட குளறுபடி குறித்து நடவடிக்கை எடுப்பதாக அந்த தனியார் ஏடிஎம் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஐயப்பன் ''ஏடிஎம்மில் பைசா எடுக்க முடியல சார். எனக்கு பேங்க் அக்கவுண்ட் கோவில்பட்டி ஃபெடரல் பேங்கில் இருக்கிறது. ஒரு எமர்ஜென்சிக்காக இங்க 3,500 காசு எடுக்க வந்தேன். ஆனால் எனக்கு வெளியில் பைசா வரும் பொழுது 3,140 ரூபாய் மட்டும்தான் வந்தது. அதில் இரண்டு இருபது ரூபாய் நோட்டு, ஒரு நூறு ரூபாய் நோட்டு, ஆறு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது. 20 ரூபாய் நோட்டைப் பார்த்த உடனே அதிர்ச்சி ஆயிட்டேன்'' என்றார்.