Skip to main content

மீண்டும் இணையும் 'ஜெய் பீம்' கூட்டணி; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

tj gnanavel directing surya next movie

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இருப்பினும் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர்  த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும்  எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்தனர். இருப்பினும் பாமக தரப்பு ஜெய் பீம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 

இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் த. செ ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தில் பிஸியாக இருப்பதால் இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு  வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணியில் ஈடுபடவுள்ளார். இதனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே த.செ ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்