Skip to main content

சூர்யா, ஜோதிகாவை சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு!!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

chrdh

 

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
 


இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.ஜே ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக வெளியாகி கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் கரோனா காரணமாக முதல்முறையாக ரசிகர்களை வீடியோ கால் வாயிலாகச் சந்திக்கவுள்ளனர். இதற்காக http://ponmagalvandhalevent.com/ என்ற இணையத்தளத்தில் முதலில் பதிவு செய்யும் 100 ரசிகர்களை இவர்கள் சந்தித்து உரையாடவுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்