Skip to main content

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்; கோபமடைந்து ராணா டகுபதி செய்த காரியம்!

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Rana Daggubati grabbed cell phone fan took selfie

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா டகுபதி, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தமிழில் ஆரம்பம், பெங்களுரு நாட்கள், காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்தும் வருகிறார். 

 

இந்நிலையில் நடிகர் ராணா டகுபதி தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்று விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு வெளியே வந்த ராணா டகுபதியை பார்த்த ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியில் அவருடன் செல்வி எடுக்க முயன்றுள்ளார். அதை பார்த்து கடுப்பான ராணா டகுபதி, முதலில் ரசிகர் கையில் இருந்த செல்போனை பிடுங்கினார். ஆனால் சுற்றி இருந்த புகைப்படக்காரர்களை பார்த்த அவர் சிரித்துக் கொண்டு செல்போனை அந்த ரசிகரிடம் வழங்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்