Skip to main content

கமல் 60 நிகழ்ச்சியில் ரஜினி, விஜய் வரிசையில் அஜித் கலந்துகொள்கிறாரா? வைரலாகும் அழைப்பிதழ்...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள். அத்துடன் அவர் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் நிறைவாகிறது. கமல்ஹாசன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் நடித்தார். 
 

kamal 60

 

 

அவரது பிறந்தநாளானா நாளை, கமலின் தந்தை டி.சீனிவாசனின் நினைவு நாளும் கூட, இதனால் அவருடைய சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தையின் உருவ சிலையை கமல் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திறந்து வைக்கிறார். அடுத்த நாளான 8 ஆம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.

நவம்பர் 9ஆம் தேதி கமலின் 60 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தன. ஆனால், வானிலை காரணமாக இந்த நிகழ்ச்சி வருகிற 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 17 அன்று சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், கமல், விக்ரம், சூர்யா என பலர் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று சமூக வலைதளத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் புகைப்படங்களை வைத்து செய்யப்பட்ட அழைப்பிதழ் வைரலானது குறிப்பிடத்தக்கது.  பொது விழாக்களில் கலந்துகொள்ளாத அஜித், கமலின் 60 வருட திரைப்பயணத்தை பாராட்ட கலந்துகொள்வார் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குஷியாக பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் அஜித் வரமாட்டார், கமலுக்கு நேரடியாக கால் செய்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிடுவார் என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.