Skip to main content

திடீர் அறிவிப்பை வெளியிட்ட கர்ணன் பட நடிகை! 

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

cvfeagfaef

 

'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் தனுஷ் - மாரி செலவராஜ் கூட்டணியில் உருவான 'கர்ணன்' படம் மூல அறிமுகமாகியுள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதற்கிடையே மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கோ கோ’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால், நன்றாக ஓடிக்கொண்டிருந்த ‘கோ கோ’ படம் திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை ரஜிஷா விஜயன் சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்...

 

"தற்போதைய கரோனாவின் இரண்டாவது அலை நெருக்கடி காரணமாக கேரள திரையரங்குகளில் இருந்து 'கோ கோ' திரைப்படத்தை திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். எங்கள் படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்ப்பதை நாங்கள் விரும்பியிருந்தாலும், எங்கள் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தான் நாங்கள் முன்னுரிமையாக வைத்திருக்க விரும்புகிறோம். தயவுசெய்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக இருங்கள். 'கோ கோ' திரைப்படம் விரைவில் மற்றொரு தளத்தின் மூலம் உங்களைச் சென்றடையும். இதுவும் கடந்து போகும்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”பரியேறும் பெருமாளை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்காததற்கு இதுதான் காரணம்” - கலை இயக்குநர் ராமலிங்கம் 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Art Dir Ramalingam

 

"வடசென்னை என்பது பழமையை உள்வாங்கிய இடமாக உள்ளது. இன்றைக்கு அங்கு சென்று பார்த்தாலும் பல விஷயங்கள் பழமை மாறாமல் உள்ளன. அதனால் வடசென்னை மீது எனக்கு காதல் அதிகம். சார்பட்டா பரம்பரை படத்திற்கு கலை இயக்கம் செய்தது பெரிய அனுபவமாக இருந்தது. 

 

சமூக மாற்றத்திற்கான படங்களையும் சாதிய படங்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கிறார்கள். பா.ரஞ்சித் எடுக்கும் படங்கள் சமூக மாற்றத்திற்கான படங்கள். எந்த இடத்திலும் என்னுடைய சாதி உயர்ந்த சாதி என்று ரஞ்சித் காட்டியதே இல்லை. என்னை ஏன் இப்படி பண்ணுற, நான் இப்படித்தான் இருப்பேன், என்னை என்னுடைய போக்கிலேயே விட்டுவிடு என்று படம் எடுத்தால் அதைத் தவறு என்கிறார்கள். 

 

நான் கால் மேல் கால் போட்டு உட்காருவேன் என்று சொன்னால் அதைத் திமிராகச் சொல்வதாக சொல்கிறார்கள். நீ அவனை கால் மேல் கால் போடாதே என்று சொல்வதால்தான் அவன் கால் போடுவேன் என்கிறான். அவன் கால், அவன் எங்கேயும் போட்டுக்கொள்கிறான், அதில் உனக்கு என்ன பிரச்சனை வருகிறது?

 

எனவே இந்த மாதிரியான படைப்புகளை சமூக மாற்றத்திற்கான படமாகத்தான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளி மாதிரி இருப்பவர்கள்கூட ரஞ்சித் சாதிப்படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். மாரி செல்வராஜ் எடுத்த பரியேறும் பெருமாள் படத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்னிடம் சொல்வதைக்கூட தன்மையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்" என்றார். 

 

 

 

Next Story

"இது என் மனதிற்கு நெருக்கமான படம்" - கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்

Published on 09/04/2022 | Edited on 11/04/2022

 

dhanush tweet about karnan film

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஆண்டு  வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அத்தோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினார். தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கிவரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி 'நானே வருவேன்' படப்பிடிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ், தாணு  உள்ளிட்ட படக்குழுவினர் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், "கர்ணன் பிளாக்பஸ்டர் படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இது என் மனதிற்கு நெருக்கமான படம். இது எல்லாவற்றிக்கும் காரணமான மாரி செல்வராஜ், தாணு சார், சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.