Skip to main content

அபிஷேக் பச்சனை இயக்கும் பார்த்திபன்! படப்பிடிப்பு ஆரம்பம்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

bdsbdsb

 

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர். ‘ஹவுஸ் ஃபுல்’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்'  போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ படத்தை எழுதி இயக்கியிருந்தார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்த இப்படத்தை, அவரே தயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே  நடித்து வெளிவந்த படங்கள் வெறும் பன்னிரண்டுதான். 

 

பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல், பல்வேறு விருது விழாக்களுக்கும் தேர்வு செய்யப்பட்டது. ஒருவர் மட்டுமே நடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்த இப்படம், முதலில் திரையரங்கில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், இப்படம் அடுத்து பாலிவுட்டுக்குச் செல்லவிருக்கிறது. இந்தப் படத்தையும் நடிகர் பார்த்திபனே இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்