Skip to main content

‘கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்! சொன்ன தேதியில் ரிலீசா?

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
vdzgbzd

 

 

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வருகிற அக்டோபர் 23- ஆம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 ரிலீஸாக இருப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி பெங்களூரில் உள்ள கான்டிராவா ஸ்டுடியோவில் தொடங்கவுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் நடைபெறவுள்ள இதன் படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் சண்டை தவிர்த்து மற்ற அனைத்து காட்சிகளையும் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜ், மாளவிகா உட்பட மற்ற அனைத்து நடிகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்