Skip to main content

ரசிகர்களுடன் 'பிரின்ஸ்' படம் பார்த்த போது சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் உற்சாகம்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

 

Fans excited by Sivakarthikeyan's act while watching 'Prince' movie with fans!


தெலுங்கு திரைப்பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது 'பிரின்ஸ்' திரைப்படம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் சுப்பு,  ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். கடந்த ஒரு வாரங்களாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

 

இந்த நிலையில் இன்று (21/10/2022) அதிகாலை 'பிரின்ஸ்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, மேளதாளங்கள் முழங்க கொண்டாடினர். தமிழகத்தில் 600- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் படம் வெளியீட்டு உரிமை கோபுரம் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே, இன்று காலை ரோகினி திரையரங்கத்திற்கு சென்றிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் அமர்ந்து படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்தார். அப்போது திரைப்படத்தின் பாடல் ஒளிபரப்பான போது, சிவகார்த்திகேயன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஆரவாரம் செய்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அத்துடன், திரையரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பி கோஷமிட்டனர்.

 

படம் முடிந்து வெளியே வந்து, அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் SK...SK... என்று கூச்சலிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்கணும்னு சிவகார்த்திகேயன் கேட்டார்" - இயக்குநர் அனுதீப்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

director anudeep speech at prince movie press meet

 

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், 'கோபுரம் சினிமாஸ்' அன்புச்செழியன், கதாநாயகி மரியா ரியாபோஷாப்கா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்த கொண்டு பேசினர். 

 

அப்போது இயக்குநர் அனுதீப் பேசுகையில், "என்னுடைய முந்தைய படமான 'ஜதி ரத்னலு' முடித்துவிட்டு இதன் திரைக்கதை எழுதும்போது சிவா சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிவா சாருக்கும் என்னுடைய ’ஜதிரத்தினலு’ படம் பார்த்து பிடித்திருந்தது. அவரிடம் பேசும் பொழுது காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்க வேண்டிய கதையாக வேண்டும் என்றார். இந்த படம் ஒரு பண்டிகை மூடில் எல்லோரும் சிரித்து கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இதற்கு முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நிறைய தமிழ் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கும் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த வாய்ப்பை இவ்வளவு சீக்கிரம் கொடுத்த சிவா சாருக்கு நன்றி. தீபாவளியன்று எல்லோரும் திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்” என்றார்.

 

'கோபுரம் சினிமாஸ்' அன்புச்செழியன் பேசுகையில்,"ப்ரின்ஸ் திரைப்படம் ஏறக்குறைய 650 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாக இருக்கிறது. சிவாவின் மற்ற படங்களை போல இந்த படமும் வெற்றி பெற்றுவிடும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். மறைந்த எம்ஜிஆர் ஐயா, பின்பு ரஜினி சார், விஜய் சார் அந்த வரிசையில் இன்று சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல நிறைய வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துகள்" என பேசினார். 

 


 

Next Story

"இதுக்கு முன்னாடி நடந்திருக்கு, ஆனால் இது தான் முதல் முறை" - ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன் ட்ரைலர்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

sivakarthikeyan prince movie trailer no.1 in you tube trending

 

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில், ஒரு ஸ்கூலில் வாத்தியாராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அதே ஸ்கூலில் பணிபுரிய வரும் மரியாவுக்கும் இடையே காதல் வருகிறது. இருவரின் காதலும் திருமணத்தில் முடிந்ததா என்பதை காமெடி ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. ஒரு காட்சியில் "இந்த மாதிரி நிகழ்ச்சி நிறைய நடந்திருக்கு. ஆனா இது தான் முதல் முறை" என்று ஒரு தாத்தா பேசும் வசனம் எந்த நிகழ்ச்சி, எதில் முதல் முறை என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் தற்போது வரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.