Skip to main content

"நண்பரின்  தீவிர சிகிச்சையால் நலமுடன் வீடு திரும்பினேன்" - இயக்குநர் பாரதிராஜா அறிக்கை  

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

director bharathiraja recovered from Corona

 

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

 

அந்தவகையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பாரதிராஜா கரோனா தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நலம் விசாரித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்