Skip to main content

'கிராமத்து தென்றல்' - அடுத்த அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Dhanush released the next update of his film

 

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

இதனிடையே 'திருச்சிற்றம்பலம்' படத்தின் கதாபாத்திரத்தின் அறிவிப்புகளை அடுத்தடுத்து படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன் படி தற்போது பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரியா பவானி ஷங்கர், இப்படத்தில் 'ரஞ்சனி' என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா 'அனுஷா'என்ற கதாபாத்திரத்தில் தனுஷின் ஸ்கூல் க்ளாஸ்மேட்டாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்