Skip to main content

“நடிகைகள் கிட்ட மட்டும்தான் இதெல்லாம் கேப்பாங்க” - அபர்ணா பாலமுரளி ஆதங்கம்  

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

aparna balamurali talk about body shaming


தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்தன் முலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இருப்பினும் சிலர் நடிகை அபர்ணா பாலமுரளி கொஞ்சம் குண்டாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அபர்ணா பாலமுரளி, “நான் உருவக் கேலியை தாங்கும் தன்னம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் முதலில் எனக்கு வருத்தமாக இருக்கும். இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஒல்லியான நடிகைகளை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது புரியவில்லை. விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோரின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனவே திறமைதான் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும்போது மட்டும் உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் அம்மாவாக நடிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்