Skip to main content
Breaking News
Breaking

"போதைப் பொருள் எடு... இல்லாவிட்டால்" என்று என்னிடம் கூறினார்கள் - அக்தர் பேச்சு!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

shoaib akhtar


தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில், "போதைப் பொருட்கள் எடுத்துக்கொள்" என்று தன்னிடம் சிலர் கூறியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், பாகிஸ்தான் நாட்டின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது பேசிய அக்தர், "நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில் என்னைச் சிலர் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளக் கூறினார்கள். இல்லையென்றால், என்னால் வேகமாகப் பந்துவீச முடியாது என்றார்கள். நான் அதை மறுத்துவிட்டேன்" எனக் கூறினார்.

 

மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அக்தர் பகிர்ந்துள்ளார்.